காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 December 2025

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியின் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா.


காரைக்குடி:

செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி சார்பில் 15-ஆம் ஆண்டு தடகள மற்றும் விளையாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் சு. செல்லப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் செ. சத்தியன் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக ஆஷிஷ் புனியா, உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.


கௌரவ விருந்தினராக முன்னாள் தேசிய கபடி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான மனத்தி பி. கணேசன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சி. ரமேஷ் கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், சிவகங்கை, பி. வேலுமணி, பிராந்திய மூத்த மேலாளர், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை, சி.ஆர். சுந்தரராஜன், சேர்மன், கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி இயக்குநர் திருமதி ராஜேஸ்வரி, முதல்வர் திரு சங்கரசுப்ரமணியம், துணை முதல்வர் திருமதி சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கத்தில் முதல்வர் திரு சங்கரசுப்ரமணியம் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டு, விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.


மழலையர் பிரிவு முதல் உயர்நிலை மாணவர்கள் வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். தற்காப்புக் கலைகள், சிலம்பம், பிரமிட், ரோலர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.


கௌரவ விருந்தினர் மனத்தி பி. கணேசன் உரையாற்றும்போது, “இந்தப் பள்ளியின் கட்டமைப்பும் விளையாட்டு மைதானமும் என்னை பெருமைப்பட வைத்தது. சரியான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, முறையான பயிற்சி பெற்றால் சிறந்த மனிதனாகவும், வெற்றியாளராகவும் உருவாக முடியும்” என மாணவர்களை ஊக்குவித்தார். தனது பள்ளிப் பருவ அனுபவங்களையும், விளையாட்டு ஆசிரியர் தங்கராஜ் அவர்களின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்.


சிறப்பு விருந்தினர் சி. ரமேஷ் கண்ணன் உரையாற்றுகையில், “மாணவர்கள் பள்ளி அளவைத் தாண்டி மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைக்க வேண்டும். இங்கு உள்ள விளையாட்டு வசதிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களும் விழாவின் பெருமையை உயர்த்தியுள்ளது” என பாராட்டினார்.

விழாவின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன. இறுதியாக துணை முதல்வர் திருமதி சுபாஷினி நன்றியுரை ஆற்றினார். 

No comments:

Post a Comment

Post Top Ad