சிவகங்கையில் தூய்மை காவலர்களுக்கு அஇபஆ&வெ பத்திரிகையாளர் சங்கத்தினர் தீபாவளி அன்பளிப்பு வழங்கினர் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 October 2025

சிவகங்கையில் தூய்மை காவலர்களுக்கு அஇபஆ&வெ பத்திரிகையாளர் சங்கத்தினர் தீபாவளி அன்பளிப்பு வழங்கினர்


சிவகங்கையில் தூய்மை காவலர்களுக்கு அஇபஆ&வெ பத்திரிகையாளர் சங்கத்தினர் தீபாவளி அன்பளிப்பு வழங்கினர்.


அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் (AINEPA), சிவகங்கை மாவட்டம் சார்பில், சிவகங்கை நகராட்சி தூய்மை காவலர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்புகள், சிவகங்கையில் உள்ள வீனஸ் தொழிற்பள்ளியில் வழங்கப்பட்டது.


சங்கத்தின் தேசியத்தலைவர் இராஜேந்திரன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை மாவட்ட சங்கம் சார்பில், சிவகங்கை நகராட்சி தூய்மை காவலர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்புகள் (சேலை-ப்ளவுஸ், வேட்டி-துண்டு மற்றும் இனிப்பு தொகுப்புகள்) உள்ளிட்டவற்றை மாநில துணைத்தலைவர் முத்தமிழ் அரசன் தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் ஏகநாதன் முன்னிலையிலும் வழங்கப்பெற்றது.


இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் முத்துவேல், பூமிநாதன், ஆனந்த், உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு நல்கிய, காரைக்குடி ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தினரை சங்கத்தினரும், பயனாளிகளும் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad