சிவகங்கை ஆட்சியரங்கத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது, பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்சியரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்து பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றம், அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதங்களில் நடந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், அரசு அலுவலகங்கள், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment