புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 8997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்ப அரசு ஆணை.
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை சார்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 8997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 3000 வீதம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 10 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரம் ருபாய் தொகையை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள மற்றும் இதர பணி நியமன நடைமுறைகள் மற்றும் அரசாணைகளை பின்பற்றி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment