சிவகங்கை மாவட்டம் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக பதிவு செய்திடல் வேண்டும் -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
சிவகங்கை மாவட்டத்தில் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான தொழில் மற்றும் பிற தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள அனைத்து வேலை அளிப்பவர்களும், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளி மாநில தொழிலாளர்களுக்கு என தனியாக உருவாக்கப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற வலைதளத்தில் முழுமையாக கட்டாயம் பதிவு செய்து அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளவும், சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்காணித்து, தீர்வு காணுவதற்கு சிவகங்கை மாவட்டத்தில், வருவாய்த்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கக துறை ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, பிற மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு பணியிடங்களில், ஏதேனும் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ, குறைகளோ இருப்பின் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையினை -1077 என்ற இலவச எண்ணிலோ, சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை -155214, 1800 4252 650 ஆகிய இலவச எண்களிலோ, காவல் துறை கட்டுப்பாட்டு அறையினை -100 என்ற இலவச எண்ணிலோ, சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தினை 044 24321438 என்ற தொலைபேசி எண்ணிலோ, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தினை 04575 240521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment