நிலுவையில் உள்ள குற்ற வழக்கில் எதிரிகள் ஆஜராகுமாறு மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் எச்சரிக்கை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 05/2005 U/s 498(A),406 IPC கீழ் தொடரப்பட்ட வழக்கானது கனம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் CC No 18/2022 என்ற வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி 1 காவேரி என்ற கலைச்செல்வம் த.பெ பாலுச்சாமி என்ற ராஜேந்திரன் சோமசுந்தரம் காலனி ஜீவா நகர் மானாமதுரை என்பவர் மீது மேற்படி நீதிமன்றத்தில் கடந்த 31.01.2024 ம் தேதி முதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாளான தேதி வரை நிலுவையில் இருந்து வருகிறது. எனவே மேற்படி வழக்கின் எதிரி காவேரி என்ற கலைச்செல்வம் வருகின்ற 29.11.2024ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதென்றும் தவறும் பட்சத்தில் மேற்படி எதிரியான காவேரி என்ற கலைச்செல்வம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்வதாக மானாமதுரை அனைத்து மகளிரு காவல் நிலைய சார்பாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment