திருப்புவனம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 November 2024

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.


திருப்புவனம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மாணவிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் த. சேங்கைமாறன் திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, பள்ளி தலைமையாசிரியர் கற்பகவள்ளி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாகான், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், பழையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சூரபிரகாஷ், மாணவரணி பாண்டியார் கிருஷ்ணன், விவசாய அணி சேகர், பள்ளி மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad