சிவகங்கையில் நடைபெற்ற 'ஊட்டச்சத்தை உறுதி செய்' துவக்க விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அண்ணா நகர் பகுதியில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 'ஊட்டச்சத்தை உறுதி செய்' இரண்டாம் கட்ட துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், உள்ளாட்சி பிரதிகள், திட்ட பயனாளிகள், திமுக காங்கிரஸ், கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment