திருப்புவனம் ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் பழையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும் மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, பேரூர் கழகச் செயலாளர் நாகூர்கனி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெ. வெங்கடசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட விவசாய அணி டி. ஆர். சேகர், நகர் கழக துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், கிளைச் செயலாளர் முருகன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment