செவிலியருக்கு எதிரான பாலியல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டித்து சிவகங்கையில் எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் போராட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 November 2024

செவிலியருக்கு எதிரான பாலியல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டித்து சிவகங்கையில் எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் போராட்டம்.


 செவிலியருக்கு எதிரான பாலியல் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டித்து சிவகங்கையில் எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் போராட்டம்.


சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது கொலைவெறி மற்றும் வண்புணர்வு தாக்குதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் "பெருந்திரள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.


இந்நிகழ்வில் தமிழ்நாடு விடுதிப்பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபால், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிதிக் காப்பாளர் நடராசன், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் இராஜா முகமது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆட்சிப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது, ஆதிதிராவிடர் நலத்துறை இரவி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் திரு இராதாகிருஷ்ணன் கண்டன நிறைவுரையும், தோழர் தீபா அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு எம் ஆர் பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு நே. சுபின் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியிட்டுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாவது, "திருச்சி மாவட்டம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31/10/24 அன்று மாலை 5 மணிக்கு பணி முடித்து வீடு சென்று கொண்டிருந்த செவிலியரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த நபர் ஒருவர் செவிலியர் பின்னால் இருந்து தாக்கி கீழே தள்ளி விட்டு அவரை கடுமையாக தாக்கி காயங்கள் ஏற்படுத்தி பாலியல் வன்முறையின் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் செவிலியரை காப்பாற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த செயலுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.


வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடுமையான சட்டங்கள் முலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பெண்கள் மீது குறிப்பாக செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.


குறிப்பாக பணியிடத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், ஊழியர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது, இச்சம்பவத்தை தொடர்ந்து பணியிடத்தில் பாதுகாப்பு இல்லாமல் பணி செய்யும் செவிலியர்களுக்கு மிகுந்த அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இரவு முழுவதும் வரும் நோயாளிகளுக்கு தனிமையில் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.


இரவு நேரங்களில் பெரும்பாண்மையான ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்களை கொண்டே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அத்த நேரங்களில் குடித்து விட்டு வரும் சமுக விரோதிகளால் பல்வேறு தாக்குதல்களுக்கு செவிலியர்கள் உட்படுத்த படுகின்றனர். மருத்துவ சேவை உயிர்காக்கும் சேவை என்பதால் இரவில் எந்த நேரத்தில் நோயாளிகள் வந்தாலும் மருத்துவமனையை திறந்து சிகிச்சை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வண்முறையில் ஈடுபடுவது வழக்கமாக நடந்து வருகிறது.


ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே இருப்பதாலும் அங்கு இரவு காவலர்கள் கூட இல்லாததாலும் செவிலியர்கள் அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் பணி செய்து வருகின்றனர். மருத்துவ ஊழியர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது நிர்வாகம் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது.


24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக இரவு காவலர்களை நியமிக்கவும், மருத்துவமனையில் சுற்று சுவர்கள் அமைக்கவும், 24 மணி நேரமும் மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதையும், அதை எந்த நேரமும் கண்காணிக்கப்படும் வசதியை ஏற்படுத்துவதுடன் குற்ற சம்பவங்கள் மேலும் நடக்காத விதத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறும்போது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதையும் மருத்துவத்துறை நிர்வாகம் உறுதி செய்திட வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad