சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 September 2024

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 


சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் நல வாரியம்' சார்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் திருமதி ஸ்ரீநிதி அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் திரு சஞ்சய் அரசு அதிகாரிகள், வாரிய பயனாளிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad