சிவகங்கை மாவட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்த அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 July 2024

சிவகங்கை மாவட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்த அமைச்சர்.

 


சிவகங்கை மாவட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்த அமைச்சர். 


சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக காரைக்குடி மண்டலத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய சட்டமன்றத் தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட 11 புதிய பேருந்துகளை  மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார். 


இதில் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் ப. சிதம்பரம், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மாங்குடி, போக்குவரத்து துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad