பூனாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பாக்ஸிங் போட்டியில் சிவகங்கையை சேர்ந்த ருட்வின்பிரபு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை.
பூனாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பாக்ஸிங் போட்டியில் சிவகங்கையை சேர்ந்த ருட்வின்பிரபு அவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் பரிசான வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்று ஊர் திரும்பிய ஒரு ருட்வின்பிரபுவை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த் அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டிய பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் வட்டச் செயலாளர் வைரமணி, ராமதாஸ், மதியழகன், கீதா கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணி ஹரிஹரன் மற்றும் ருட்வின்பிரபு குடும்பத்தார்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment