மானாமதுரையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

மானாமதுரையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் பங்கேற்பு.

 


மானாமதுரையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் பங்கேற்பு. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளை அருகில் உள்ள கத்தோலிக்க திருச்சபையான புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் இந்தியா கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்திட கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரம் விநியோகம் மூலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 


இதில் ஆலய பங்குத்தந்தை பாஸ்டின், ஆலய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கை சின்னத்திற்கு வாக்குகளித்து கார்த்தி சிதம்பரம் அவர்களை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்திட கேட்டுக்கொண்டனர். 


தொடர்ச்சியாக மானாமதுரை சி.எஸ்.ஐ திருச்சபை ஆலயத்தில் திருச்சபையின் நிர்வாகிகள் மற்றும் நாளைய பொதுமக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரம் மூலம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகத்துறை திரு து.ஜா. பால் நல்லதுரை, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜீவ் கண்ணா, முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் கே. வல்லகொண்டையன், நகர் காங்கிரஸ் கமிட்டி கே. வி. பொம்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad