மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஶ்ரீ அருள்மிகு ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டுகான சித்திரை திருவிழாவை முன்னிட்டு சித்திரை மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதில் கோயில் நிர்வாகிகள், மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தகோடி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் கொடியேற்றத்தை தொடர்ந்து சித்திரை 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து சித்திரை 9 ஆம் தேதி திங்கட்கிழமையன்று திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment