மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 April 2024

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.


 மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூர் சாலையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை மற்றும் 2024-2025 ஆம் கல்வியாண்டும் இனிதே தொடங்கப்பட்டது.


இந்த இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கிட 45 எல்.கே.ஜி குழந்தைகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் அட்சதை அரிசியில் "அ" என்ற முதல் எழுத்தை எழுதியும், தேன் இட்டும் தங்கள் கல்வி ஆண்டை தொடங்கினர். 


பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்து அவர்களின் பள்ளி கல்வியை தொடங்கி வைத்தார். பள்ளியின் ஆட்சியர் திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் குழந்தைகளுக்கு பென்சில் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரிய பெருமக்கள் மேற்கொண்டனர். 


மேலும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறி பெற்றோர்களுக்கு இனிப்புகளும் எல்.கே.ஜி முதல் படி அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு பலூன் வழங்கியும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad