மானாமதுரை வட்டாசியர் அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 April 2024

மானாமதுரை வட்டாசியர் அலுவலகத்தில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர்களான வருவாய் அதிகாரி ஜெயமணி மற்றும் வட்டாட்சியர் ராஜா ஆகியோரின் முன்னிலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் பணிகள் தொடங்கப்பட்டு தேர்தல் அலுவலர்கள் மூலமாக சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சிகளை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad