காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 74 வது பட்டமளிப்பு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 April 2024

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 74 வது பட்டமளிப்பு விழா.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 74 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. சான்றோர் அணிவகுப்புடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வரவேற்புரையாற்றி கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். 

2023-2024ஆம் கல்வியாண்டில் மொத்தம் 3995 மாணவர்கள் படித்து வருவதாகவும், தேசிய  தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் 63 ஆம் இடம் பெற்றுள்ள அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இக்கல்வியாண்டில் 936 இளநிலை மாணவர்களும், 222 முதுநிலை மாணவர்களும் 1ஆய்வியல் நிறைஞர் மாணவர் என மொத்தம் 1159 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றிய கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியின் செயலாளர் முனைவர் அந்தோணிசாமி, இன்று பட்டம் பெற்ற உங்களை இச்சமுதாயம் உற்று நோக்குகிறது என்றும், எதையும் சந்திப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக மாறியிருக்கும் நீங்கள் பிறரின் வாழ்வில் ஒளி ஏற்றக் கூடியவர்களாக மாற வேண்டும் என்றும் அதுதான் நீங்கள் இச்சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்றும் கூறி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இவ்விழாவில் பேராசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


- மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad