மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் மனைவி ஸ்ரீநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 April 2024

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் மனைவி ஸ்ரீநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 


மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் மனைவி ஸ்ரீநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு இந்தியா கூட்டணியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியை வேட்பாளர் திரு கார்த்திகா சிதம்பரம் அவர்களின் மனைவி ஸ்ரீநிதி கை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக வருகை தந்தார். பின்னர் மானாமதுரை வார்டு பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்களிடம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


இந்நிகழ்வில் மானாமதுரை திமுக நகர செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் காந்தி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad