சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேவர் சிலை எதிரில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ படை வீரர்கள் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, தேர்தலுக்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுத்திட வாகன சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் மற்றும் ஏதேனும் சந்தேகபடும்படியான பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றனவா என்பது குறித்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி மாநில காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் பரஸ்பரம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனையின் போது பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு வாகனம் ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment