ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் வேட்பாளர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 April 2024

ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் வேட்பாளர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பொறியாளர் எழிலரசி அவர்கள் சனிக்கிழமை காலை மானாமதுரை தல்லாகுளம் ஸ்ரீ முனியாண்டி கோவிலில் வணங்கிய பின்னர் தான் போட்டியிடும் ஒலிவாங்கி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதில் காலை முதல் பிற்பகல் வரை மானாமதுரை மேற்கு ஒன்றிய வட்டாரங்களில் வேட்பாளர் எழிலரசி அவர்கள் வாக்காளர் பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். பிற்பகல் முதல் மாலை வரை மானாமதுரை கிழக்கு ஒன்றியங்களில் உள்ள கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் பிரச்சாரத்தின் இறுதியாக மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள பிரதான பகுதிகளில் வேட்பாளர் எழிலரசி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். 


வாக்கு சேகரிப்பின்போது பேசிய வேட்பாளர் அவர்கள் பிரச்சார கூட்டங்களுக்கு எதிர் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க ஆட்களை அழைத்து வருவதாகவும், வாக்கு சேகரிப்பிற்கு கூட பணம் கொடுத்துதான் ஆட்களை அழைத்துவரும் நிலையில் இவர்கள் உள்ளனர் என்றும் கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad