மானாமதுரை நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக "தேர்தல் பரப்புரை தெருமுனைக் கூட்டம்" செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் சிப்காட் பஸ் ஸ்டாப் அருகில் மானாமதுரை நாம் தமிழர் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் அவர்களின் தலைமையிலும், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன், கிழக்கு ஒன்றிய தலைவர் வினோத் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் மாவட்ட வழக்கறிஞர் பாசறை துணை செயலாளர் ஆவரங்காடு கார்த்திக் ராஜா, தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு பேருரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் மானாமதுரை நகர, கிழக்கு ஒன்றிய, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment