இந்திய குடிமைப் பணித் தேர்வில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவி அஞ்சுகா வெற்றி பெற்று சாதனை! - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 April 2024

இந்திய குடிமைப் பணித் தேர்வில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவி அஞ்சுகா வெற்றி பெற்று சாதனை!

 


அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவி இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை. அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2019-2022 ஆம் கல்வியாண்டில் கல்வி பயின்ற  இளங்கலை வணிகவியல் துறை மாணவி அஞ்சுகா இந்திய குடிமைப் பணித் தேர்வில் தன் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 472 ஆவது இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்த  இம் மாணவி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் போது வேலைவாய்ப்பு பயிற்சி முகமையின் சார்பாக நடைபெற்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். பட்டம் முடித்த பிறகு இணைய வழியாக ஓராண்டு காலம் பயிற்சி பெற்று தற்போது நடைபெற்ற குடிமைப்பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 472 ஆவது இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த இம்மாணவியை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பாராட்டினர். 


சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad