ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 


ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணமானது சித்திரை எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆனந்தவல்லி சோமநாதர் ஆகியோருக்கு மலர்மாலை அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 



ஸ்ரீ ஆனந்தவல்லி திருக்கல்யாண நிகழ்வின்போது அனைத்து பெண்களும் தாங்கள் அணிந்துள்ள திருமாங்கல்ய கயிற்றினை புதுப்பித்து வழிபாடு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆனந்தவல்லி சோமநாதர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தகோடி பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் அருளாசி பெற்றனர். மேலும் நாளை சித்திரை 9 ஆம் தேதி காலை நான்கு ரத வீதிகளை சுற்றி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதால் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad