காரைக்குடி மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 March 2024

காரைக்குடி மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தின விழா கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் மானகிரியில் இயங்கி வரும் செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்சு தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி பிரெஞ்சு நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2012 ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விழா கொண்டாட்டத்தின் மூலம் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தை அறியவும், கலை, இசை, நடனம், பேஷன், உணவு வகைகள், சினிமா மற்றும் சுற்றுலா ஆகியவற்றிற்கான கதவைத் திறக்கும் கலாச்சாரத்தின் மொழியாக பிரெஞ்சு மொழி பார்க்கப்படுவதோடு, பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்வது மாணவர்களின் உயர் படிப்புக்கு உதவும் எனவும், பிரெஞ்சு மொழி பேசுவது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறதாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. 

பல்வேறு செயல்பாடுகள் மூலம் பிரெஞ்சு மொழியின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்காக இந்நாளை பிரெஞ்சு துறையை சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் கவிதை வாசித்தல், பாடல் பாடுதல், பிரெஞ்சு பிரபலங்கள் பற்றிய காணொளிக் காட்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு கூடுதலாக சில சுவையான பிரெஞ்சு உணவுகளையும் பள்ளியில் தயார் செய்து மகிழ்ந்தனர்.

 

இந்நிகழ்வின்போது பள்ளியின் சேர்மன் உயர்திரு. எஸ். பி. குமரேசன் மற்றும் துணை சேர்மன் திரு கே. அருண்குமார் அவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள். முதல்வர் திருமதி உஷா குமாரி, துணை முதல்வர் திருமதி பிரேம சித்ரா, பிரெஞ்சு ஆசிரியர் எஸ். மணிகண்டன் மற்றும் பிரெஞ்சு துறைத் தலைவர் சி. பி. ருத்ரா தேவி ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பிரெஞ்சு பிரதிநிதிகளான ஜூன்மார்டெல், டேவிட் மற்றும் எஸ்டெல் ஆகியோர் பிரான்சில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் தங்கள் வாழ்த்துக்களைத் அனுப்பியுள்ளனர் என்பது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad