சிவகங்கை நகர் திமுக சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் பொதுமக்களிடையே அரசின் சாதனைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களையும் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மாநில இலக்கிய அணி தலைவர் மு. தென்னவன், மாவட்ட கழக நிர்வாகிகள், சிவகங்கை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், நகர் கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, நகர் இளைஞரணி, நகர் மாணவரணி, நகர் மகளிரணி, நகர் தகவல் தொழில்நுட்ப அணி, நகர் கழக மூத்த முன்னோடிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment