சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி கருத்தரங்க கூடத்தில் "விளையாட்டு நாள் விழா" நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 March 2024

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி கருத்தரங்க கூடத்தில் "விளையாட்டு நாள் விழா" நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி கருத்தரங்க கூடத்தில் "விளையாட்டு நாள் விழா" திங்கட்கிழமை காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது. இவ்விளையாட்டு நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் மன்னர்  துரைசிங்கம் அரசு  கலைக்கல்லூரி விளையாட்டு விழாவில் தமிழ்த்துறை தொடர்ந்து 5 வது முறையாக ஓவரால் சேம்பியன் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து துறைத்தலைவர், வரலாற்றுத்துறை மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர் முனைவர் இல. கலைச்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் முனைவர் க. துரையரசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். 

உதவிப்போராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் இரா. சோமசுந்தர மணிகண்டன் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார். துறைத்தலைவர், விலங்கியல் துறை மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர் முனைவர் ந. அழகுச்சாமி வாழ்த்துரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரான தலைவர், மதுரா பள்ளிக்குழுமம் மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எல். நாச்சியப்பன் சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினார். 

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சி. ரமேஷ்கண்ணன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். இறுதியாக துறைத்தலைவர் வேதியியல் துறை மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர் முனைவர் அ. சிரில் நன்றியுரையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரியின் முன்னாள் இன்னாள் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad