லாடனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

லாடனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் அரசு லாடனேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக ரூபாய் 1.50 கோடி மதிப்பிலான எட்டு வகுப்பறைகளைக் கொண்ட திருமதி வேலம்மாள் நினைவு கட்டிடத்தினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். 

இப்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், வேலம்மாள் கல்வி குழு தலைவர் முத்துராமலிங்கம், திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் சேங்கைமாறன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துசாமி, மாவட்ட கல்வி இடைநிலை அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி தொடக்கநிலை அலுவலர் புவனேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்வில் வழக்கறிஞர் அமலநாதன், ஒன்றிய கழக செயளாலர் கடம்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, ஈஸ்வரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் அழ. மூர்த்தி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி துணை தலைவர் ரஹ்மதுல்லாகான், பள்ளி தலைமை ஆசிரியர் மீனா, மாவட்ட ஒன்றிய பேரூர் ஊராட்சி திமுக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் ன, உள்ளாட்சி பிரதிநிதிகள் மாணவச் செல்வங்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad