சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரூசோ அவர்களின் நினைவாக அவருடைய திருவுருவ சிலைக்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி உரை ஆற்றினார். இதில் ரூசோ அவர்களின் மனைவி ஜோன்ஸ் ரூசோ அவர்கள் உடனிருந்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டு. மேலும் மாவட்ட நகர் ஒன்றிய பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment