சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் உள்ள கிருஷ்ணராஜபுரம் காலணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் லட்சுமணன்(65). லட்சுமணனின் மகன் நாகராஜ் சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என கேட்டு அவரது தந்தையை நேற்று அவதூறாக பேசி கையால் தள்ளி விட்டதில் லட்சுமணனிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து லட்சுமணனின் மனைவி ராக்கு தன் கணவர் தாக்கப்பட்டது குறித்து தன் மகன் மீது சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு ராக்கு அளித்த புகாரியின் அடிப்படையில் மானாமதுரை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment