சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ரூபாய் 234 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இப்ராஹிம், மாவட்ட நகர ஒன்றிய பேரூர் ஊராட்சி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment