காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 February 2024

காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் சுமார் நூறு கோடி மதிப்பீட்டில் புதிய அரசு சட்டக் கல்லூரிக்கான பூமி பூஜை விழா மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், சட்டத்துறை செயலாளர் திரு எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜீத், சட்டக்கல்வி இயக்குனர் திருமதி பேராசிரியர் முனைவர் ஜெ. விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் விழா முன்னேற்பாடுகளை மேற்கொண்டார். 


இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட நகர வட்டார பேரூர் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சிவகங்கை மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சார்பு அணிகள், கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad