கைகலப்பில் முடிந்த கருத்து கேட்டுணரும் கூட்டம், கூட்டத்திற்குற்கு சம்பந்தமில்லாத வெளி ஆட்கள், போலீசார் விசாரணை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 February 2024

கைகலப்பில் முடிந்த கருத்து கேட்டுணரும் கூட்டம், கூட்டத்திற்குற்கு சம்பந்தமில்லாத வெளி ஆட்கள், போலீசார் விசாரணை.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் மெடிகேர் என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் எனும் பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக 'கருத்து கேட்டுணரும் கூட்டம்' மானாமதுரை ஆய்வு மாளிகை அருகில் உள்ள ஸ்ரீ அழகர் திருமண மஹாலில் சுமார் 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மாவட்ட  சுற்றுச்சூழல் அலுவலர், மாவட்ட  மாவட்ட வருவாய் அலுவலர், மானாமதுரை வட்டாட்சியர் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கருத்து  கேட்பு கூட்டத்தின் போது அனைத்து தரப்பினரும் ஒருமானதாக இந்த ஆலை வரக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர். தப்பித்தவறி ஆலை வந்தால் புற்றுநோய் சிறுநீரக நோய், தோல் நோய் உள்ளிட்ட பல விதமான நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அச்சம் தெரிவித்தனர். உதாரணம் விருதுநகர் மாவட்டம் முக்குலத்தில் இதே போன்ற தொழிற்சாலை அமைத்ததால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு 160 அப்பாவி பொதுமக்கள் இறுந்துள்ளதாகவும் தங்கள் கருத்தை அழுத்தமாக தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டத்திற்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத வட மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளியூரைச் சேர்ந்த நபர்களும் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்.

ஆலைக்கு ஆதரவாக ஆலை நிர்வாகம் தங்களின் ஆட்களை கூட்டி வந்ததாக தெரியவந்ததையடுத்து, கருத்து கேட்பு கூட்டத்தின் மத்தியில் இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்து  முறைகேடாக கருத்துக்களை அநாகரிகமான பதிவு செய்த நபர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad