சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் புதிய டயாலிஸ் சென்டருக்கான கட்டிட அடிக்கல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் புதிய டயாலிஸ் சென்டருக்கான கட்டிட அடிக்கல்.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படவுள்ள புதிய டயாலிஸ் சென்டர் கட்டிட பூமி பூஜை விழா மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ப. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி,  சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய்காந்தி, மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad