மானாமதுரை கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் தங்கம் வென்று அசத்தல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2024

மானாமதுரை கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் தங்கம் வென்று அசத்தல்.


ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான குடியரசு தின பாரதியார் தின 2023-2024 க்கான புதிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் எம். ரித்தீஷ் என்ற மாணவர்  இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட இரட்டைக் கம்பு சுற்றுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவன் ரித்தீஷ் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad