சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலைய நுழைவு வாயில் எதிரில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் சுமார் எட்டு மாதங்களாக இந்த கழிவறையானது பயணிகளின் பயன்பாட்டில் கொண்டுவரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் போதிய அளவு கழிவறை வசதி இல்லாமல் அனைத்து பயணிகளும் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் என பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இக்கழிவரையை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே நிர்வாகத்தையும் உள்ளாட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment