சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 December 2023

சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு முன்னாள் சட்டமன்ற பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டமன்ற பேரவை செயலர் செல்வராஜ், கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், சார்பு செயலாளர் பாஸ் ஹரி தேசிங், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இலக்கியத் தென்றல் தென்னவன், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் ஆகியோர்  முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். 


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, கோட்டாட்சியர் சுகிர்தா, சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்தவாணி, சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை. ஆனந்த், காங்கிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கழக நிர்வாகிகள் ஜெயராமன், கார் கண்ணன், ஒமேகா திலகவதி காளிமுத்து, ஆசிரியர் பெருமக்கள், குழந்தைச் செல்வங்கள், மாணவ மாணவிகள், கழக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad