அம்மனுமீதான நடவடிக்கையாக தூய்மை இந்தியா 2.0 திட்டம் 2022-2023ன் கீழ் கண்மாய்க்கரை பேருந்து நிறுத்தம் அருகில் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் ஆண் பெண் இருபாலருக்குமான கழிப்பறை கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணியாணையும் வெளியிடப்பட்டது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கண்மாய்க்கரை அருகில் பழைய என்.எம்.கே டேங்க் முன்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு பில்லர் கட்டுமானப்பணி நடைபெற்றும் வருகிறது.
இதற்கிடையில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினரால் பணியானது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தொய்வடைந்த பணி நிறைவடையுமா இல்லையா? என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக கட்டுமான பணிகளை பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment