சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட ஒவெசெ மேல்நிலைப் பள்ளியில் 'கலைஞரின் நூற்றாண்டு விழா மருத்துவ முகாமினை' முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பங்கேற்ற மருத்துவ பயணிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் மன்ற துணை தலைவர் பாலசுந்தரம், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, நகர் கழக துணைச் செயலாளர், மன்னார் மன்னன், நகராட்சி ஆணையர் ரங்கநாயகி, அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மருத்துவர் கண்ணன், வேலம்மாள் மருத்துவமனை அலுவலர், மருத்துவ குழுவினர், மானாமதுரை நகர மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, தேன்மொழி, சித்ரா, சண்முகப்பிரியா, தேன்மொழி, பாலாஜி, மணிமேகலை, சத்யா, செல்வகுமார், ராஜேந்திரன், செந்தில், தர்மா, பொதுமக்கள் மற்றும் கழகம் முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment