மானாமதுரை தயாபுரம் டிஎல்எம் மருத்துவமனை செல்லும் சாலையில் வழிந்து ஓடும் சாக்கடை, அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 November 2023

மானாமதுரை தயாபுரம் டிஎல்எம் மருத்துவமனை செல்லும் சாலையில் வழிந்து ஓடும் சாக்கடை, அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கல்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தயாபுரம் டிஎல்எம் தொழுநோய் மருத்துவமனை செல்லும் பிரதான சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகில் சரியான பராமரிப்பின்றி இருந்து வந்த கழிவுநீர் வடிகால் நிரம்பி உடைந்து சாலையில் வடிந்து வருகிறது என்று குற்றச்சாட்டினர் அப்பகுதி நகர்வாசிகள். 

மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டபோது கூறுகையில், இவ்வழியே மருத்துவமனைக்கு நடந்து செல்லும் நோயாளிகளுக்கும், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் குப்பை கழிவு சாலையில் வடிந்தோடும் சாக்கடை போன்றவற்றால் நோய் தொற்றும் அபாய சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகளை கொண்ட தயா நகர் மற்றும் தாயாபுரம் ரயில்வே கேட் பகுதிகளில் போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதற்கு வேறு வழி இன்றி பொதுமக்கள் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்ற அபாயகரமான அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


இதன் விளைவாக துர்நாற்றம் கொசு போன்றவற்றால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். மருத்துவமனை செல்லும் பிரதான சாலையே இது போன்ற சுகாதாரமற்ற நிலையில் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து தலையிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பைத்தொட்டி, கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை அமைத்து தர தயாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad