மானாமதுரை நகர் காவல்துறைக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த கடையை மேற்பார்வை செய்து அருகில் உள்ள வீட்டாரிடம் கூடுதல் தகவல்களை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்து திருடர்களை பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தனிபடை போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடப்பட்டு வந்த நிலையில் வாடிப்பட்டி அருகே வடகரையை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் செல்வக்குமார் (23) என்பவரை டிஎஸ்பி திரு கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் மானாமதுரை டி1 காவல்நிலைய ஆய்வாளர் திரு முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் திரு பூபதி ராஜா பால சதீஷ் கண்ணன் மற்றும் மானாமதுரை காவல் நிலைய காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment