நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 October 2023

நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல்.


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு எற்ப நவீன சலவையகங்கள் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்கப்பட உள்ளது. இதன்படி, நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத்தொழில் தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.300000மும், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.300000-ம் வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

மேற்படி குழுவினர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்,  துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 


விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.100000மிகாமல் இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.


இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad