இச்சம்பவம் குறித்து சில பத்திரிகை வட்டார நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், தங்களின் உயிரை துச்சமென மதித்து மக்கள் சேவையில் இரவு பகல் பாராமல் தங்களை ஈடுபடுத்தி வரும் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து கையாள்வதில் அரசியல் தொடங்கி அதிகாரிகள் வரை தவறு செய்து வரும் இன்றைய சூழ்நிலையில், இதுபோன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக அத்துமீறுபவர்கள் தங்களை யாரும் தண்டிக்கவோ தட்டிக் கேட்கவோ முடியாது என்ற தவறான எண்ண நிலைபாடு கொண்டுள்ளது வேதனைக்குரியது.
எனவே தான் ஒரு அரசு பணியில் பொதுமக்களின் சேவையில் ஈடுபட்டு வருகின்றோம் என்பதை மறந்து, இது போன்ற குற்ற செயல்களில் கூடுதலாக பணியின்போது சீருடை இல்லாமல் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவருக்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பாக வலியுறுத்திக் கொள்வதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment