நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டக் குழு ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 October 2023

நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டக் குழு ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டக் குழு ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த ஊர்வலம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் தொடங்கி பெரியார் சிலை வழியாக அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது. 

ஊர்வலத்திற்கு காரைக்குடி துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  தலைமை தாங்கினார். அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வழிகாட்டுதலில் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் துரை  முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்றத் தலைவர் முத்துத் துரை  ஆகியோர் கொடி அசைத்துப் பேரணியைத் துவக்கி வைத்தனர். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், உதவிக் கோட்டப் பொறியாளர் அரிமுகந்தன், உதவிப்பொறியாளர் பூமிநாதன்   ஆகியோர் கலந்துகொண்டனர். 


அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முருகேசன், வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோஃபர் பேகம், முனைவர் லதா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 


நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லெட்சுமண குமார், முனைவர் சித்ரா ஆகியோர் மாணவ, மாணவிகளை வழிநடத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad