இரவு பகல் என பாராமல் 24 மணி நேரமும் பத்து இருபது பேர் என கூட்டம் கூட்டமாக வந்து அய்யனார் கோவிலை சுற்றி வளைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். குடித்துவிட்டு பாட்டில்களை தரையில் உடைத்தும், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் திண்பண்ட குப்பைகளை அங்கேயே வைத்து விட்டு, அங்குள்ள சிலைகளுக்கு சேதம் விளைவிக்குமாறும் செய்து வருகின்றனர் என்று பொதுமக்கள் மற்றும் நகர் வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் பெண்கள் குழந்தைகளை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மானாமதுரை நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடாதவாறு இந்த சட்டவரோத கும்பலை தடுத்திட தக்க நடவடிக்கை எடுத்துதர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment