மானாமதுரையில் நீர்நிலைகளின் பாதுகாப்பு குழுவின் உதவியுடன் துப்புரவு பணியில் நடைபெற்றது, கூட்டுறவு துறை அமைச்சர் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2023

மானாமதுரையில் நீர்நிலைகளின் பாதுகாப்பு குழுவின் உதவியுடன் துப்புரவு பணியில் நடைபெற்றது, கூட்டுறவு துறை அமைச்சர் பங்கேற்பு.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட மானாமதுரை நகராட்சியில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயில் அருகில் 'மாஸ் கிளீனிங்' என்னும் துப்புரவு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி வைகை ஆறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகராட்சி பகுதிகளில் 'நீர்நிலைகளின் பாதுகாப்பு குழுவின்' உதவியுடன் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர். கூடுதலாக மானாமதுரை வீரவிதை சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகளும் துப்புரவு பணியில் ஈடுபட அமைச்சருடன் கை கோர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் துரை. ராஜாமணி, ஒன்றிய பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad