திருப்புவனம் ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 July 2023

திருப்புவனம் ஒன்றியத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியம் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பால் உற்பத்தியை பெருக்கும் பொருட்டும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 16-இலட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலையத்தை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர். பெரியகருப்பன் அவர்களும், மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். 

அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக திருப்புவனம் ஒன்றியம் பழையனூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழையனூர் -வல்லாரேந்தலை இணைக்கும் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.


நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் அவர்களும், நெடுஞ்சாலை துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன் அவர்களும், நகர கழக செயலாளர் திரு நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் திரு கடம்பசாமி அவர்களும், ஒன்றிய குழு துணைத் தலைவர் திரு அழ. மூர்த்தி அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், மானாமதுரை கழக நிர்வாகிகளும் மற்றும் உடன்பிறப்புகளும், ஊர் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad