சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் "முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா" திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கை மாறன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களும், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மாநில மகளிர் தொண்டரணி இணைச் செயலாளர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களும் மற்றும் கழக இலக்கிய அணி புரவலர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் பட்டிமன்ற நடுவராக சிறப்பு விருந்தினர் நாவுக்கரசர் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் திரு எம்.ஏ. கடம்பசாமி அவர்களும், பேரூர் நகர செயலாளர் திரு நாகூர் கனி அவர்களும், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் சகோதரர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்.
No comments:
Post a Comment