தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி மக்களுக்கு அர்பணித்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 June 2023

தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி மக்களுக்கு அர்பணித்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் புதூர் பகுதியில் அதிகரித்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்து மக்கள் பயன்பெறும் வகையில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் புதிய மெகாதிறன் கொண்ட புதிய மின்மாற்றியை துவக்கி வைத்தார். 

நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான திரு.சேங்கைமாறன் அவர்களும், நகரக் கழக செயலாளர் நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் கடம்பசாமி அவர்களும், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சுப்பையா அவர்களும், டி.ஆர்.சேகர், நகர மன்ற உறுப்பினர்களும், கிளை கழக செயலாளர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.


அதேபோல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட மணலூர் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் புதிய பேருந்து நிறுத்தத்தக் கட்டிட அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான திரு.சேங்கைமாறன் அவர்களும், நகரக் கழக செயலாளர் நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் கடம்பசாமி அவர்களும், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.சுப்பையா அவர்களும், டி.ஆர்.சேகர், கிளை கழக செயலாளர்களும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்.

No comments:

Post a Comment

Post Top Ad