கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான வெயில் காரணத்தினால் பள்ளிகள் திறப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை நீட்டிப்பு செய்து வந்த நிலையில் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் ஆரம்பமானது. இதற்கிடையில் விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் முதல் நாளான இன்று திருபுவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் இன்முகத்துடன் வரவேற்றதுடன், தமிழ்நாடு அரசு இலவச பாட புத்தகங்களை மாணவிக்கு வழங்கினார்.


நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை அவர்களும், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன் அவர்களும், நகரக் கழக செயலாளர் திரு.நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.கடம்பசாமி அவர்களும், நகர்மன்ற உறுப்பினர்களும், ஒன்றிய கவுன்சிலர்களும், பள்ளி ஆசிரிய பெருமக்களும், பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment